tag:blogger.com,1999:blog-5940387342979260383.post774539239187720353..comments2023-08-01T03:01:34.632-07:00Comments on இறையருட் கவிமணி: நபிமொழி நானூறுஅப்துல் கையூம்http://www.blogger.com/profile/05705220035284957135noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5940387342979260383.post-46251684143204320562009-01-22T02:04:00.000-08:002009-01-22T02:04:00.000-08:00நபிமொழி நானூறு என்னும் நூலை பல ஆண்டுகளுக்கு முன் ...நபிமொழி நானூறு என்னும் நூலை பல ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். பாதுகாத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நபி மொழியையும் மிகவும் கவனத்துடன் பேராசிரியர் கவிதையாக்கியிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்.<BR/>அரபிக் கல்லூரியில் பயின்று அரபியில் நபிமொழியைப் பயின்றவர்கள் பேராசிரியரின் நபிமொழி நானூறு கவிதை நூலை வாசித்தால் வியந்து போவார்கள். அந்த வகையில் அரபி மூலத்துடன் ஒப்பிட்டுப்பர்த்து வியந்தேன். மாஷா அல்லாஹ் அற்புதமான கவிதையாக்கம்.<BR/>உதாரணத்திற்கு இரு நபி மொழிகள்<BR/>' இரு தாடைகளுக்கு இடையில் உள்ளதற்கும் இரு கால்களுக்கிடையில் உள்ளதற்கும் எவர் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்காக சுவாக்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என்பது நபி மொழி. பேராசிரியரின் அற்புதமான மொழி பெயர்ப்பைப் பாருங்கள்<BR/><BR/>ஈரலகிடையே இருப்பதையும்<BR/>இருகாலிடையே இருப்பதையும் <BR/>பேரழகுடனே காப்போர்ககு<BR/>பேணும் சொர்க்கம் நபி மொழியாம்<BR/><BR/>'இறைவனை நினைத்து அழுத கண்களையும் இஸ்லாத்தைக் காப்பதற்காக விழித்திருந்த கண்களையும் நரக நெருப்பு தீண்டாது' என்பது நபி மொழி. பேராசிரியரின் மொழி நடையைப் பாருங்கள்.<BR/> <BR/>இறையினை அஞ்சி அழுத விழி<BR/>இஸ்லாம் காக்க விழித்த விழி<BR/>இரு வழி மீதும் நரகத் தீ <BR/>இருக்காதென்பது நபிமொழியாம்.மஸ்தூக்காhttps://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com