Friday, January 9, 2009

காவியச் சுவை

பொற்சைவ வைணவமும்
புத்தபிரான் பொன்னுரையும்
நபிகள்பிரான் நல்லுரையும்
பைந்தமிழின் பண்பேற்றுக்
கற்போரை பிடித்திழுத்துக்
கனிதமிழின் சுவையூட்டி !
நாயன்மார் நாவமுதும்
நல்லாழ்வார் பாசுரமும்
மேயபுகழ் மேகலையும்
மேம்படு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும்
மாண்பேறு சீறாவும்
காமுறவே எல்லாரும்
கண்ணாரக் கண்டபோதும்
காவியமாய் இந்நாட்டில்
கதிர்வீசக் காண்கின்றோம்.

- இறையருட் கவிமணி

No comments:

Post a Comment