Tuesday, April 21, 2009

திருமறை திறப்பு



அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோ ரிறையின் இனியபேர் போற்றி!
உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும்
புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய!
அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோ ரிறையே! இனிய பேரிறையே!
முடுவுநாளதனின் முழுமுத லரசே!
அடியேம் யாமுன் னடியினைத் தொழுதேம்!
உன்பா லன்றோ உதவியை நாடுவேம்!
நன்னெறி மீதெமை நடத்துவா யாக!
நின்னருள் பொழிந்த நேயர்தம் நெறியில்;
நின்சினம் கொண்டோர், நெறிவிட் டகன்றோர்
செல்நெறி யன்றது செம்நெறி யன்றே!

1 comments:

  1. syed abuthahir uthamapalayamDec 19, 2011 02:44 AM

    உத்தம பாளையம் கல்லூரியில் இந்தப் பாடலே இறை வாழ்த்து பாடல்.

    ReplyDelete