Friday, January 9, 2009

கவிதை

சீரிய செந்தமிழ் எம்மொழியாம் – எங்கும்
சிறந்திடும் இஸ்லாம் எம் வழியாம்
நேரிய இலக்கியம் போற்றுவதே – எங்கள்
நெஞ்சம் இனித்திடும் நற்பணியாம்

நிறையுள்ள செய்யுளும் உரைநடையும் – பொன்
நெஞ்சத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கும்
கறையில்லா இஸ்லாம் இலக்கியமோ – ஒளிக்
கதிர்மழைக் குன்றேன உயர்ந்திருக்கும்.

தனிப்பெரும் சிறப்புகள் மிகவோங்கி – நன்கு
தழைத்திடும் நிலத்தினை வாழ்த்திடுவோம்
இனித்திடும் தமிழினில் மலர்ந்திருக்கும் – உயர்
இஸ்லாம் இலக்கியம் வளர்த்திடுவோம்

- இறையருட் கவிமணி

No comments:

Post a Comment