Wednesday, January 21, 2009

என்ன வேண்டும்?

பட்டுறையில் பொதிந்தெடுத்துப் பக்தியுடன் போற்றும்
பண்பார்ந்த மறையுரகள் நெஞ்சேற வேண்டும்
பட்டங்கள் துணைகொண்டு பாமரரை ஏய்த்துப்
பாழாக்கும் எண்ணங்கள் பஞ்சாக வேண்டும்!

கண்மூடிச் செயலெல்லாம் மண்மூடிப் போகக்
கற்றறிந்தோர் முன்வந்து கருத்துரைத்தல் வேண்டும்!
எண்டிசையும் புகழ்கொண்டே வாழ
எஃகுள்ளம் உருவாக்கும் ஏந்திழைகள் வேண்டும்!

(மனை விளக்கு நூலில் இறையருட் கவிமணி)

No comments:

Post a Comment