Wednesday, January 21, 2009

"திருமலர்"

நாயக மாலை!
பூலோக இருட்டை
மாய்த்து மறைத்து
முதலில் எழுந்த
முதல்வனின் தூதொளி
சிந்திய கதிர்களை
அனுபவித் தறிந்த
மகிழ்ச்சிக் களிப்பில்
கவி நெஞ்சில் மலர்ந்த
பனி நீர்ப் பூக்கள்!

உம்மத்துக்களின்
உயிர் மீட்சிக்காக
உலகாள்பவனிடம்
மன்றாடுகின்ற
இறுதித் தூதருக்கு
இறையருள் கவிமணி
வாசித்தளித்த
வாழ்த்துப்பா மடல்!

ஆழ அகல இசைச்
சொற்பொருள் நிறை
நய அணி சுவைத்
தேன் ததும்பும்
தீன் பாக்குடம்!

நேச நபியை
நெருங்கிக் காதலித்த
நித்யக் கவிஞரின்
சத்திய ஈரடிகளின்
ஈரம் நிறைந்த
இதய அணிவகுப்பு!

இறையருள் கவியின்
ஆழ்மன அடிநாத
'நாயகமே!' விளியின்
ஒலியதிர்வு அணுக்களின்
கூட்டுத் தொகையில்
எழுந்த எழுத்தக்களின்
கவிச் சொல் வடிவங்கள்!

உலகம் உள்ளவரை
நபிநேசர் உள்ளவரை
ஆன்மீக மணம்
வீசிச் சிறக்கும்
அருள் வாடா மாலை!
நாயக மாலை!
நாவும் அகமும்
இனிக்கும் மாலை!!
மணக்கும் மாலை!!!

No comments:

Post a Comment