Sunday, February 1, 2009

புதுக்கல்லூரி

கலையாட்சி செய்கின்ற
கவினாறும் சென்னையிலே
உடலின் கண் விழியைப்போல்
உடையிடையே பாகைப்போல்
கடலின் கண் முத்தைப்போல்
கவின் பொய்கைத் தாமரைப்போல்
நகர் நடுவன் தலைநிமிர்ந்து
நல்லறிவு மாமலையாய்
திகழ்கின்ற கல்லூரி...
(சென்னை புதுக்கல்லூரியைப் புகழ்ந்து இறையருட் கவிமணி அவர்கள் கவியரங்கத்தில் பாடியக் கவிதை)

No comments:

Post a Comment