Thursday, February 5, 2009

அதிரையில் கல்விப் பணி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதர் முஹ்யத்தீன் கல்லூரியில் 1962 முதல் 1967 வரை தமிழ்த் துறைத் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார் கா. அப்துல் கபூர்.

அவர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த திரு. நெ.து. சுந்தரவடிவேலு பங்கேற்றார். முதல்வரின் வரவேற்புரையால் கவரப்பட்ட நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் தான் ஆற்றிய உரையில்,

"நான் எத்தனையோ அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இன்று உங்கள் முதல்வர் நிகழ்த்திய சொற்பொழிவைப் போன்று வேறெங்கும் கேட்டதில்லை. மனம்விட்டுச் சொல்கிறேன். சிறிது கூட தடையில்லாமல் சரளமாகவும் வேகமாகவும் எப்படி அவரால் பேச முடிகிறது என்று வியந்து போனேன். தமிழ் பேச்சாளர்களில் உங்கள் முதல்வரின் பேச்சு தனிப்பாணி; அவரது மொழியழகும் சொல்லழகும் நடையழகும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன " என்று புகழ்ந்துரைத்தார்.

[ஹ.மு.நத்தர்சா எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்ட "இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்" என்ற நூலிலிருந்து]

No comments:

Post a Comment