Monday, February 16, 2009

பள்ளிப் பண்

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாஃபீ கல்பீ கய்ருல்லாஹ்
நூரு முஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹா – ஹக்கு
லாயிலாஹா இல்லல்லாஹ்

இறைவா உனது கருணையினால்
.....இம்மை மறுமை பேறுகளைக்
குறையா தெமக்கு கொடுத்திடுவாய் !
.....கொடுமை யனைத்தும் தடுத்திருவாய்
நிறைவாயுள்ள நலன் ஈந்து
.....நெஞ்சம் மலரச் செய்திடுவாய் !
கறையாயுள்ள பகுதிகளைக்
.....கழுவித் தூய்மை யாக்கிடுவாய் !

பிறையாய்த் திகழும் எம்பள்ளி
.....பிறைபோல் வளர உதவிடுவாய் !
நிறைவாம் சீதக்காதி பெயர்
.....நின்றே நிலவும் நிறுவனத்தார்
நிறைவே கொள்ளத் துணைபுரிவாய்
.....நிலைபேறுடைய எம் கொள்கை
குறையா தோங்க அருள் புரிவாய் !
.....குறைகள் தீர்க்கும் கோமானே !

அறிவுக் கடலாம் கஸ்ஸாலி
.....அடையும் நெஞ்சின் விரிவைப்போல்
அறிவின் ஒளியாய் எம்நெஞ்சை
.....அழகாய் அமைப்பாய் அருளாளா !
செறியும் கல்வி எமக்கூட்டும்
.....சீரிய நேரிய ஆசிரியர்
அறியும் பெற்றோர் அனைவருக்கும்
.....அருளைப் பொழிவாய் ரஹ்மானே !

(இயற்றியவர் : பிறைப்பள்ளியின் நிறுவன முதல்வர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர், M.A. அவர்கள்)

No comments:

Post a Comment