Thursday, February 5, 2009

நீர் வீழ்ச்சி



"இதென்னடா இது?
அந்தப் பாறை முகடுகளில்
தண்ணீரைத் துவைத்துக்
காயப்போட்டது யார்?

* * *

இங்கென்ன
தண்ணீர் முத்துக் குளிக்கிறதா?

இது என்ன
வானுக்கும் பூமிக்கும்
வைர நெசவா?

அது என்ன
தற்கொலை புரியும் தண்ணீருக்கு
அத்தனை ஆனந்தமா?"

என்று நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகை தன் அபரிதமான கற்பனையில் அருமையாகச் சொல்லப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் வரிகளைப் படித்து ஆனந்தமடைந்தேன்.

"கவிதையிற் பேசிய காவலர்கள்" என்ற இறையருட் கவிமணியின் கட்டுரையில் இதுபோன்ற ஒரு அழகிய வருணனையை நாம் காணலாம். முகலாயக் கவிப்பேரரசி ஜெய்புன்னிஸாவின் கவிதை ஒன்றை இறையருட் கவிமணி அவர்கள் இவ்வாறு மொழி பெயர்க்கின்றார் :

" நீர் வீழ்ச்சியே!
யாருக்காக நீ கவல்கிறாய்?
யாருக்காக நீ தலையைத்
தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறாய்?
என்னைப் போல் இரவனைத்தும்
தலையைப் பாறைகளில்
முட்டி மோதிக் கொண்டு
அழுவதற்குக் காரணமான
உன் துயர்தான் யாது?"

அற்புதமான இக் கற்பனை நம்மை பரவசப்படுத்துகிறது அல்லவா?

No comments:

Post a Comment