Monday, January 19, 2009

கவிஞர் மு.மேத்தா



இறையருட் கவிமணி! இலக்கிய மாமணி!
அப்துல் கபூரை அறியார் எவருளர்?
கம்பீரமான கவிதைக் குயில் அது!
களங்கமில் லாத பெளர்ணமி நிலவது!
வண்ணத் தமிழ்ப் பயிர் வளர்த்த வயலது!
செருநர் நடுங்கிய செந்தமிழ்ப் புயலது!
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதிபோல்
உருவமும் உள்ளம்போல் ஓங்கி உயர்ந்தது!
இதயங் கவரும் எழுத்தாளர் அவர்!
பேராற்றல் பெற்ற பேச்சாளர் அவர்!
அன்னைத் தமிழுக்கும் ஆண்டவன் பணிக்கும்
தன்னை அர்ப்பணித்த தமிழ்ப்பே ராசான்!
திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!!

No comments:

Post a Comment