Monday, January 19, 2009

ஹ,நசீருத்தீன்

இறையருட் கவிமணி
நிறை வாழ்வு
வாழ்ந்தவர்.

அஞ்சுவன்னச்
சோலையில்
கொஞ்சும்
தமிழ்க்கிளி.

கவிதைகளை
கருக்கொண்ட
கார்மேகம்.

மழையாய்ப்
பொழியும்
சொல்லாற்றல்.

அமுதச் சுவைகாட்டும்
அற்புதக்
கவியாற்றல்.

பூமான் நபிமீது
புகழ்ப்பா பொழிந்த
பொன்கரத்துப்
புதையல்!

பளிங்கைப் போல்
எளிய நெஞ்சகம்.
முத்தமிழில்
வித்தை காட்டியவர்.

எளிய தமிழுக்கு
வித்து ஊன்றியவர்.

அறியாமைக்கு எதிரான
குத்தீட்டி
உயர்ந்த
சுவனத்துச் சோலையில்
கொள்கைப் பறவையாய்ச்
சிறகு விரிக்க
என் துஆக்கள்!

ஹ. நசீருத்தீன்
திருவிதாங்கோடு

No comments:

Post a Comment