Tuesday, January 20, 2009

அருள் புரிவாய்!

ஈமான் உறுதி வன்மையுற
இம்மை மறுமை செம்மையுற
தேமாங் கலிமா இறுதியிலே
தெவிட்டா துரைத்து நன்மைபெற

பூமா மணமே மண்ணறையில்
பொலிய உயிரும் நன்மையுறக்
கோமா னுன்னை வேண்டுகின்றோம்
குறையா தமக்குக் கொடுத்திடுவாய்!

- இறையருட் கவிமணி

No comments:

Post a Comment