Wednesday, January 28, 2009

ஆவி பிரியும் வேளையில்

எண்ணமே வாழ்வு என்பார்கள். இறையருட் கவிமணி இயற்றிய “துஆ நூறு” என்ற கவிதைகள் மிகவும் உருக்கமானவை.

“ஆவி பிரியும் அந்த வேளையில்
நாவினால் கலிமா நவின்றிடச் செய்வாய் !
நாயனே உன்றன் நல்லடியார்களுள்
நேயமாய் எனக்கு நல்லிடம் அளிப்பாய்”

என்ற வரிகள் மனதை நெகிழச் செய்யும்.

11.01.2002 வெள்ளி மாலை 'அஸர்' தொழுகைக்காக ‘ஒளு’ எடுத்த சற்று நேரத்தில் கலிமா மொழிந்தவாறு அவர்கள் ஆவி பிரிந்ததை அந்த நேரத்தில் அவர்கள் அருகே நின்று கொண்டிருந்த ஆறு பேரும் அந்த காட்சியைக் கண்டார்கள்.

No comments:

Post a Comment