Wednesday, January 28, 2009

வார்த்தைச் சித்தர்

செந்தமிழ் வார்த்தைகளைக் கொண்டு சொற்சிலம்பு ஆடுவதில் அவருக்கு நிகர் அவரே. சந்தம் கமழும் சந்தன வரிகள் அவைகள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் சொட்டும் மொழிகள்.

நாயகத் திருமேனியை நபிமணி மாலையில் வருணிப்பதைப் பாருங்கள் :

“தத்தித் தாதி துதைத்த நபி
தத்தை துதித்த தூதுநபி
தித்தித் தாதி ததைத்த நபி
தித்தித் தோதி துதித்த நபி”

எடுத்துக் காட்டாக இதோ ஒரு ஓவியக் கவிதை :

“நன்னபி மன்னபி முன்னுநபி
நந்நபி மென்னபி மின்னுநபி
இன்னபி பொன்னபி யென்னுநபி
இதயங் குளிர உன்னுநபி”

இன்னுமொரு வார்த்தை ஜால வரிகள் :

“மண்ணும் விண்ணும் எண்ணுநபி
மண்ணி லெண்ணும் திண்ணநபி
கண்ணும் எண்ணும் பண்ணுநபி
கண்ணி லிண்ணும் வண்ணநபி”

No comments:

Post a Comment