Wednesday, January 28, 2009

திருமலர் மீரான்

1977 – நவம்பரில் திருவிதாங்கோட்டில் ‘எல்லாம் எழுத்துக்கள்’என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்திற்கு இறையருட் கவிமணி அவர்கள் தலைமை வகித்தார்கள். “ஈ” என்னும் தலைப்பில் திருமலர் எம்.எம்.மீரான் கவிதை பாடினார். ஈயாத புல்லர்களையும், ஈஈ என இளித்து வாழும் இளிச்சவாயர்களையும், சீதனத்திற்காக ஈஈ என இரக்கும் இதயம் இரும்பாகிப்போன இளைஞர்களையும் பிடித்து கடுமையாகச் சாடினார்.

அக்கணம் இறையருட் கவிமணி அவர்கள் பாடிய வரிகள் இவை :

“எழுச்சிக் கவிஞர் எம் எம் மீறான் ஈன்றார்
ஈயடிச்சான் காப்பி யில்லாத கவிதைகளை !
ஈமானில்லாது ஈயாது இருகை யேந்தும்
இளிச்ச வாய்ச் சீமான்களை சீறும் கவிதையிது”

No comments:

Post a Comment