Tuesday, January 20, 2009

அபிவை ஜின்னா

பொதிகை மலைச் சாரலிலே
புகுந்து வரும் தமிழ்க் காற்று!
அதிமதுரச் சொற் சிலம்பில்
அகங்குளிரும் அமுத ஊற்று!
புதினச் சொல் புகுந்து வரும்
புதுமைகளின் பூங்காற்று - இது
மதுரகவி கபூரண்ணா
மணித்தமிழின் பூச்செண்டு!

தேன்சிந்தும் எழுத்தாற்றல் - இவரின் ஏற்றம்!
தெய்வீக அருள் சுரக்கும் - இவரின் ஞானம்!
காணுகின்ற காட்சிகளைக் கவியில் காட்டும்!
கருத்தழகு கபூர் மாட்சி - கவிச்சொல்லாட்சி!
வான்சிந்தும் திருமறையில் - வாழ்வைக் காணும்
வற்றாத பேரன்பு - வாஞ்சை மிகு நற்பண்பு!
திருவிதாங்கோடு பெற்ற - தீன் தமிழ்க்கவிஞர் இவர்!
மருவிலா வாழ்வு கண்ட - மாணிக்க மனிதரிவர்!
அப்துல் கபூர் எனும் - அற்புத ஆசான் இவர்!
ஒப்பிலா உயர்வு கண்ட - உன்னத அறிஞர் இவர்!
அப்பப்பா! இவர் மறையின் - ஆதங்கம் அணையவில்லை இவரை
அல்லாஹ் சுவனத்தில் - அகங்குளிர அமர்த்திடுவான்!
அதுவே நம் பிரார்த்தனை - அல்லாஹ்விடம் வேண்டிடுவோம்!!

No comments:

Post a Comment