Friday, January 30, 2009

அரும்பூ வந்தது

குழந்தை இலக்கியம் படைப்பது எல்லோராலும் இயலாத காரியம். குழந்தைகளோடு பழகி அவர்கள் மனதை நன்கு புரிந்துக் கொண்ட ஒருவரால்தான் அது இயலும் கவிமணி (1876), மகாகவி பாரதி (1882), பாவேந்தர் பாரதிதாசன், அழ.வள்ளியப்பா இவர்களின் வரிசையில் இறையருட் கவிமணி அவர்கள் நீங்காத இடத்தைப் பெற்று விட்டனர். 1989-ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்த "அரும்பூ" ஒரு சரித்திரம் படைத்தது. இப்படைப்பை பாராட்டுகிறார் ஒரு கவிஞர்,

கரும்புக் காட்டை கவியாக்கிக்
.....காதிற் குள்ளே ஊற்றியவர்
சுருங்கிப் போன மானிடரைச்
.....சொற்பொழி வாலே நிமிர்த்தியவர்
விருந்து படைத்து வெகுநாட்கள்
.....விலகிச் சென்றன எனும்போதில்
அரும்பூ மலரைக் கண்டேனே
.....அதிக இன்பம் கொண்டேனே

படிக்க எடுத்தேன் வெடுக்கென்று
.....பற்றிக் கொண்டார் வீட்டினுள்ளோர்
முடித்தார் ஒருவர் பின்னாக
.....முடிக்கப் பொறுக்க மாட்டாமல்
படிக்க முனைந்தார் அனைவருமே
.....பழுத்த குலையில் ஈக்கள்போல்
தொடுத்த அரும்பூ அத்தனையும்
.....சுவைத்'தேன்' சுவைத்'தேன்' என்றாரே

படிக்கட் டாகும் அறிவுரையா
.....பழக்குலை தோற்கும் கனிவுரையா
வெடிக்கும் புதிரா விளையாட்டா
.....விழுந்து விழுந்து சிரிக்கட்டா
தொடுக்கும் கணக்கா ரயில்வண்டித்
.....தொடரில் உலகைச் சுற்றுவதா
நொடிக்குள் எல்லாம் இயலுவதே
.....நுழைந்தால் போதும் அரும்பூவில்

- தமிழ்மாமணி, புலவர் அ.அஹ்மது பஷீர் M.A.,M.Ed.,

No comments:

Post a Comment