Wednesday, January 7, 2009

முதல் தமிழ் முதல்வர்

தமிழ் நாட்டின் கல்லூரி வரலாற்றில் முதன் முதலில் முதல்வரான தமிழ்ப் பேராசிரியர் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்கள்.

தமிழுக்கு முதலிடம் தந்து தமிழறிஞர்களைக் கெளரவித்ததில் முன்னோடியாக இருந்தது உத்தமபாளையம் ஹாஜி. கருத்த ராவுத்தர் கெளதிய்யாக் கல்லூரி. இக்கல்லூரி நிர்வாகம் 45 ஆண்டுகளுக்கு முன்பே கா.அப்துல் கபூர் என்ற தமிழ்ப் பேராசிரியரைக் கல்லூரி முதல்வராக்கிப் பெருமைபடுத்தியது. தமிழ் நாட்டின் கல்லூரி வரலாற்றில் முதன் முதலில் முதல்வரான தமிழ்ப் பேராசிரியர் அப்துல் கபூர்தான்.

சி.இலக்குவனார், ஏ.சி.செட்டியார், வ.சுப.மாணிக்கம், சுப.அண்ணாமலை, தமிழ்க் குடிமகன் போன்ற பல தமிழ்ப் பேராசிரியர்கள் இதன் பின்னரே கல்லூரி முதல்வராகிப் பெருமை சேர்த்தனர் என்பது எண்ணத் தக்கது.

உத்தமபாளையம் கல்லூரியில் 45 ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வராக இருந்த நேரத்தில், அப்போதைய தமிழக ஆளுநர் திரு. விஸ்ணுராம் மேதி ஒரு மருத்துவமனையத் திறப்பதற்காகக் கம்பம் வந்தார். அந்த நேரத்தில் ஆளுநரின் ஆங்கில உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவர் அப்துல் கபூர். பேராசிரியர் சிறப்பாக உடை அணிந்திருந்ததைக் கண்ட அவ்வூர் மக்கள் இவர்தான் ஆளுநர் என்று பேசக் கூடிய முறையில் மிடுக்கான உடையில் தோன்றியிருந்தார்.

டாக்டர் எஸ்.ஷாகுல் ஹமீது எம்.ஏ., பிஹெச்.டி.ஆய்வு நெறியாளர், தமிழாய்வுத்துறை, புதுக் கல்லூரி, சென்னை-14.

நன்றி : தினமணி 2001, (ஈகைப் பெருநாள் மலர்)

No comments:

Post a Comment