Wednesday, January 7, 2009

பள்ளி வாசல்

"More things are wrought by prayer than this world dreams of" என்றான் ஆங்கிலக் கவிஞன் ஆல்ப்ரெட் லார்ட் டென்னிஸன். இஸ்லாமியர்களின் தொழுகைத் தளமாக விளங்கும் பள்ளிவாசலுக்கு பொருத்தமான விளக்கத்தை இதைவிட சிறப்பாக யாராலும் சொல்ல இயலுமோ?

உருக வரும் தொழுகையினால்
உத்தமர்கள் சித்திபெற
வருகவென அழைக்கின்ற
வான்சுட்டும் பள்ளிவாசல் !

புவன வாயில் புகுந்தவர்கள்
பூமணக்கப் புகழ்மணக்கச்
சுவன வாயில் நுழைவதற்குச்
சுடர்காட்டும் பள்ளிவாசல் !

ஆத்மீக ஒளிபரப்பி
அகவிருளை ஓட்டுகின்ற
சாத்மீக மின்நிலையம்
சாந்தி வழிப் பள்ளிவாசல் !

முயற்சியினால் இறையவனின்
முத்திரையைப் பெறுவதற்குப்
பயிற்சியினை வழங்குகின்ற
பாசறையே பள்ளிவாசல் !

- இறையருட் கவிமணி

No comments:

Post a Comment