Friday, January 30, 2009

எண்ணமே வாழ்வு

கவிமணி அவர்களின் 'அரும்பூ' நூலில்

"அழியா தென்றும் வண்மை
அயரா தென்றும் திண்மை
எழிலைச் சேர்ப்பது பெண்மை
என்றும் சொல்நீ உண்மை"

"வில்லிற்குரியது அம்பு
வீணாம் ஆசை அம்பு
இல்லிற்குரியது செம்பு
எண்ணம் வாழ்வென நம்பு"

'அயராதென்றும் திண்மை' சந்தக் கவியில் 'எண்ணம் வாழ்வென நம்பு' எனும் தொடர்கள்

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

என்ற குறளுக்குக் குரல் கொடுப்பவையாக உள்ளன.

- பேராசிரியர், ஏரல் ஜே.அஷ்ரப் அலி
பொருளியல் துறை, வக்பு வாரியக் கல்லூரி, மதுரை

No comments:

Post a Comment