Friday, January 30, 2009

பூச்செண்டு

தமிழின் இலக்கியம் பூச்செண்டு
தனியாய் அதற்கொரு மணமுண்டு
தமிழின் தீந்தேன் விருந்துண்டு
தழைக்கும் நாமோ மலர்வண்டு !

சமண பெளத்த வைணவமும்
சைவ இஸ்லாம் கிறிஸ்துவமும்
கமழும் நூல்கள் இந்நாட்டின்
கவினார் பண்பின் களஞ்சியமாம்

- இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்
(அரும் பூ நூலிலிருந்து)

No comments:

Post a Comment