Friday, January 30, 2009

கேக்



ஒரு சிறிய ஊரில் தேநீர்க்கடை இருந்தது. அக்கடையிலிருந்து காகம் ஒன்று "கேக்"கை எடுத்தது. பக்கத்தில் இருந்த மரத்தின் மீது உட்கார்ந்தது. மரத்தின் அடியில் இருந்த ஒரு கொக்கு காகத்திடம் கேக்கைக் கேட்டது. காகம் "இல்லை" என்று கூறுவதற்கு வாயைத் திறந்தது. கேக் கீழே விழுந்தது. கொக்கு அதனை எடுத்துக்கொண்டு காகத்தைப் பார்த்து கேலி செய்தது.
குழந்தைகளுக்கு கிளுகிளுப்பூட்டும் இக்கற்பனைக் கதையை நாலே வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல் நற்றமிழ் சுவை மணக்க நயம்பட இறையருட் கவிமணி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் :
காக்கை கேக்கைக் கோக்க
கொக்கு கேக்கைக் கேக்க
காக்கை கேக் கைக் கக்க
கொக்கு கெக்கெக் கெக்கே !
('அரும் பூ' நூலிலிருந்து)

No comments:

Post a Comment